உலகம்

ஜி20 மாநாடு- வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா பங்கேற்கிறார்

Published On 2023-08-27 23:26 GMT   |   Update On 2023-08-27 23:26 GMT
  • உச்சி மாநாடு டெல்லியில் பிரகதி மைதானத்தில் வரும் செப்டம்பர் 9 மற்றும் 10ம் தேதிகளில் நடக்கிறது.
  • அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீனப் பிரதமர் ஜி ஜின்பிங், உச்சி மாநாட்டில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜி 20 அமைப்புக்கு இந்த ஆண்டு இந்தியா தலைமை வகிக்கிறது. அந்த அமைப்பின் உச்சி மாநாடு டெல்லியில் பிரகதி மைதானத்தில் வரும் செப்டம்பர் 9 மற்றும் 10ம் தேதிகளில் நடக்கிறது.

ஜி20 மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீனப் பிரதமர் ஜி ஜின்பிங், கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் உள்ளிட்ட பல நாட்டுத் தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் உச்சி மாநாட்டில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், ஜி20 மாநாட்டில் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா கலந்து கொள்வார் என்று வங்கதேச துணை உயர் ஆணையர் அந்தலிப் எலியாஸ் தெரிவித்தார்.

இதுகுறித்து எலியாஸ் மேலும் கூறுகையில், "பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிரதமர் ஷேக் ஹசீனா இடையே இருதரப்பு சந்திப்பும் இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்" என்றார்.

Tags:    

Similar News