உலகம்

அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிச்சூடு- 4 பேர் உயிரிழப்பு

Published On 2025-10-12 22:15 IST   |   Update On 2025-10-12 22:15:00 IST
  • 20 பேர் பலத்த காயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
  • நேற்று நடந்த துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் உயிரிழந்தனர்.

அமெரிக்காவில் சமீபகாலமாக அடிக்கடி துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.

கால்பந்து மைதானம் மற்றும் பள்ளி என இருவேறு வேறு இடங்களில் நேற்று நடந்த துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் உயிரிழந்தனர்.

அமெரிக்காவின் தெற்கு கரோலினா பகுதியின் தீவில் பார் ஒன்று உள்ளது. நெரிசலானா பாரில் நுழைந்த மர்மநபர் ஒருவர் தீடிரென துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டார்.

இதில், சம்பவ இடத்திலேயே 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 20 பேர் பலத்த காயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

Tags:    

Similar News