உலகம்

உலக வங்கியின் தலைவர் பதவிக்கு இந்திய வம்சாவளி அஜய் பங்காவை பரிந்துரைத்தார் அதிபர் ஜோ பைடன்

Published On 2023-02-23 23:14 GMT   |   Update On 2023-02-23 23:14 GMT
  • உலக வங்கி தலைவர் பதவிக்கு அஜய் பங்காவை பரிந்துரைத்தார் அதிபர் பைடன்.
  • இதுதொடர்பாக வெள்ளை மாளிகை அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

வாஷிங்டன்:

உலக வங்கியின் தலைவராக பதவி வகித்து வருபவர் டேவிட் மல்பாஸ். இவர் தனது பதவி முடிவதற்கு ஒரு வருடத்திற்கு முன்னர் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இந்நிலையில், உலக வங்கியின் தலைவர் பதவிக்கு இந்திய வம்சாவளியை சேர்ந்த அதிகாரி அஜய் பங்காவின் பெயரை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பரிந்துரை செய்துள்ளார். இதுதொடர்பாக வெள்ளை மாளிகை அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அஜய் பங்கா மாஸ்டர் கார்டு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் பணியாற்றினார். தற்போது ஜெனரல் அட்லாண்டிக் நிறுவனத்தின் துணைத் தலைவராக பணியாற்றுகிறார்.

Tags:    

Similar News