உலகம்

வங்காளதேசத்தில் தீப்பிடித்து எரிந்த ரெயில்: 5 பேர் உடல் கருகி பலி

Published On 2024-01-06 01:22 GMT   |   Update On 2024-01-06 01:22 GMT
  • கடந்த மாதமும் இதுபோன்று ரெயிலில் தீ விபத்து ஏற்பட்டு 4 பேர் பலி.
  • தேர்தலை புறக்கணித்துள்ள எதிர்க்கட்சிகள் மீது அரசாங்கம் குற்றச்சாட்டு.

வங்காளதேசம் நாட்டின் தலைநகர் டாக்காவிற்கு நாட்டின் மேற்குப் பகுதியில் உள்ள ஜேஸ்சோர் நகரில் இருந்து பெனாபோல் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்து கொண்டிருந்தது. திடீரென அந்த ரெயிலில் தீப்பிடித்தது. இந்த தீ விபத்து மளமளவென நான்கு பெட்டிகளில் பரவியது.

இதனால் பயணிகள் அலறி அடித்து வெளியேறினர். இருந்த போதிலும் ஐந்து பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

நாளை வங்காளதேசத்தில் தேர்தல் நடைபெற இருக்கிறது. தேசிய தேர்தலை புறக்கணிப்போம் எனக் கூறிவரும் எதிர்க்கட்சியினர் இதுபோன்ற தீ வைப்பு சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகப்படுவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

கடந்த மாதம் இதுபோன்று நடைபெற்ற ரெயில் தீ விபத்தில் நான்கு பேர் உயிரிழந்தனர். அப்போது போலீசார் மற்றும் அரசு எதிர்க்கட்சியான வங்காளதேசம் தேசியவாத கட்சி மீது குற்றம்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

அதேவேளையில் வங்காளதேச தேசியவாத கட்சி குற்றச்சாட்டை மறுத்திருந்தது. ஆளும்கட்சியின் அடக்குமுறைக்கு சாக்குபோக்கான குற்றச்சாட்டு எனவும் தெரிவித்திருந்தது.

வங்காளதேசத்தில் நாளை வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதை முக்கிய எதிர்க்கட்சிகள் புறக்கணித்துள்ளது. பிரதமர் ஷேக் ஹசினா ராஜினாமா செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் கடந்த வருடம் போராட்டம் செய்தன. இதில் ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.

Tags:    

Similar News