உலகம்

அமெரிக்காவில் சோகம்: காணாமல் போன 4 இந்தியர்களும் சடலமாக மீட்பு

Published On 2025-08-04 01:50 IST   |   Update On 2025-08-04 01:50:00 IST
  • அமெரிக்காவில் 4 இந்தியர்கள் மாயமானதாக தேடப்பட்டு வந்தனர்.
  • அந்த 4 பேரும் விபத்தில் சிக்கி உயிரிழந்தது விசாரணையில் தெரியவந்தது.

வாஷிங்டன்:

அமெரிக்காவின் நியூயார்க்கில் இருந்து பென்சில்வேனியா சென்ற இந்திய வம்சாவளிக் குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் மாயமாகினர். உறவினர்கள் தொடர்பு கொள்ள முயற்சித்தும் அவர்களைக் கண்டறிய முடியவில்லை. இதையடுத்து, போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

விசாரணையில், காணாமல் போன 4 இந்தியர்களும் ஜூலை 29-ம் தேதி பென்சில்வேனியாவில் உள்ள ஒரு கடைக்குச் சென்றதும், அதன்பின் அவர்கள் மாயமானதும் தெரிய வந்தது.

காணாமல் போனவர்கள் டாக்டர் கிஷோர் திவான் (89), ஆஷா திவான் (85), ஷைலேஷ் திவான் (86), கீதா திவான் (84) ஆகியோர் என தெரியவந்தது. ஹெலிகாப்டர் மூலம் அவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடந்தது.

இந்நிலையில், காணாமல் போன 4 பேரும் சாலை விபத்தில் உயிரிழந்தது கண்டறியப்பட்டுள்ளது என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.

உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்த மேற்கு விர்ஜினியா நகர ஷெரிப் விசாரணை முடிந்த பிறகு கூடுதல் தகவல் வெளியிடப்படும் என தெரிவித்தார்.

Tags:    

Similar News