உலகம்

அமெரிக்காவில் சோகம்: கடலில் படகு கவிழ்ந்து 4 அகதிகள் பலி

Published On 2025-11-17 04:56 IST   |   Update On 2025-11-17 04:56:00 IST
  • திடீரென ராட்சத அலை தாக்கியதால் படகு நடுக்கடலில் கவிழ்ந்தது.
  • இதனால் படகில் இருந்தவர்கள் தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்தனர்.

வாஷிங்டன்:

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் சான்டியாகோ கடற்பகுதியில் ஒரு படகு சென்று கொண்டிருந்தது.

அதில் இருந்தவர்கள் சட்ட விரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைய முயன்றனர். அப்போது திடீரென ராட்சத அலை தாக்கியதால் அந்தப் படகு நடுக்கடலில் கவிழ்ந்தது. இதனால் படகில் இருந்தவர்கள் தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்தனர்.

தகவலின் பேரில் கடலோர போலீசார் அங்கு சென்றதும் மீட்பு பணி நடைபெற்றது. ஆனால் அவர்கள் செல்வதற்குள் 4 பேர் கடலில் மூழ்கி இறந்தனர். இதனையடுத்து, கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த 5 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு மற்றொரு படகு மூலம் கரைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

Tags:    

Similar News