உலகம்

மாலியில் கோர விபத்து: ஆற்று பாலத்தில் பேருந்து கவிழ்ந்து 31 பேர் பலி

Published On 2024-02-28 08:27 IST   |   Update On 2024-02-28 08:27:00 IST
  • உலகளவில் நான்கில் ஒருபகுதி விபத்து ஆப்பிரிக்காவில் நடைபெறுவதாக ஐ.நா. கூறுகிறது.
  • மாலியில் கடந்த 19-ந்தேதி நடந்த விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர்.

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று மாலி. மாலியில் இருந்து பர்கினா பாசோவிற்கு பயணிகளை ஏற்றிக் கொண்டு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.

பேருந்தில் 40-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். பமாகோவின் தெற்குப் பகுதியான கோமாண்டூ அருகே பேருந்து ஆற்றின் மேல் கட்டப்பட்டுள்ள பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தை இடித்துக் கொண்டு ஆற்றில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் 31 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 10 பேர் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலர் கவலைக்கிடமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேற்கு ஆப்பிரிக்காவில் சாலை விபத்து அதிக அளவில நடப்பது சகஜமான சம்பவமாக உள்ளது. பொது போக்குவரத்து பேருந்துகளில் அளவுக்கு அதிகமான அளவில் மக்கள் பயணம் செய்வது, முறைப்படுத்துவதில் குறைபாடு ஆகியவை பேருந்து விபத்துக்கள் அடிக்கடி நடைபெறுவதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

மாலியில் கடந்த 19-ந்தேதி பயணிகள் பேருந்து லாரி மோதிய விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர். 46-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

ஐ.நா. தரவுகளின்படி உலக அளவில் உள்ள வாகனங்களில் எண்ணிக்கையில் 2 சதவீதம் மட்டுமே ஆப்பிரிக்க நாடுகளில் உள்ளன. ஆனால், உலகளவில் நடைபெறும் விபத்துகளில் நான்கில் ஒரு பகுதி ஆப்பிரிக்காவில் நடைபெறுவதாக தெரியவந்துள்ளது.

Tags:    

Similar News