உலகம்
பாகிஸ்தானில் அடுத்தடுத்து இரண்டு குண்டு வெடிப்பு: 3 போலீசார் உயிரிழப்பு
- செக்போஸ்ட்-ஐ குறிவைத்து முதல் தாக்குதல் நடத்தப்பட்டது.
- பின்னர் அப்பகுதிக்கு சென்ற போலீசார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் நடந்த அடுத்தடுத்து இரண்டு குண்டு வெடிப்பு சம்பவத்தில் 3 போலீசார் உயிரிழந்தனர்.
முதலில் போலீஸ் செக்போஸ்ட்-ஐ குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. இது தொடர்பாக தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அப்போது அந்த போலீசார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
இதில் 3 போலீசார் பரிதாபமாக உயிரிழந்தனர். ஹங்கு நகரில் நடைபெற்ற இந்த தாக்குதலில் எஸ்.பி. படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.