உலகம்

பாகிஸ்தானில் அடுத்தடுத்து இரண்டு குண்டு வெடிப்பு: 3 போலீசார் உயிரிழப்பு

Published On 2025-10-24 16:30 IST   |   Update On 2025-10-24 16:30:00 IST
  • செக்போஸ்ட்-ஐ குறிவைத்து முதல் தாக்குதல் நடத்தப்பட்டது.
  • பின்னர் அப்பகுதிக்கு சென்ற போலீசார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் நடந்த அடுத்தடுத்து இரண்டு குண்டு வெடிப்பு சம்பவத்தில் 3 போலீசார் உயிரிழந்தனர்.

முதலில் போலீஸ் செக்போஸ்ட்-ஐ குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. இது தொடர்பாக தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அப்போது அந்த போலீசார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

இதில் 3 போலீசார் பரிதாபமாக உயிரிழந்தனர். ஹங்கு நகரில் நடைபெற்ற இந்த தாக்குதலில் எஸ்.பி. படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Tags:    

Similar News