உலகம்

அமெரிக்காவில் வணிக வளாகம் அருகே துப்பாக்கி சூடு - 3 பேர் பலி

Published On 2023-09-24 05:42 GMT   |   Update On 2023-09-24 05:42 GMT
  • அமெரிக்காவில் வணிக வளாகம் அருகே 2 மர்ம மனிதர்கள் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
  • இந்தத் துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் பரிதாபமாக பலியாகினர்.

வாஷிங்டன்:

அமெரிக்காவின் அட்லாண்டாவில் உள்ள ஒரு வணிக வளாகம் அருகே 2 மர்ம மனிதர்கள் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினர். கண்ணில் பட்டவர்களை எல்லாம் சரமாரியாக சுட்டனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் 17 வயது சிறுவன் உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே குண்டு பாய்ந்து இறந்தனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட மர்ம மனிதர்கள் யார், என்ன காரணத்துக்காக இந்த சம்பவம் நடந்தது என்ற விவரம் தெரியவில்லை. இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

Tags:    

Similar News