உலகம்

நேபாளத்தில் சோகம் - பனிச்சரிவில் சிக்கி 3 பேர் பலி

Published On 2023-05-07 12:40 GMT   |   Update On 2023-05-07 12:40 GMT
  • நேபாளத்தின் கர்னாலி மாகாணத்தில் பனிச்சரிவு ஏற்பட்டது.
  • பனிச்சரிவில் சிக்கி 3 பேர் பலியாகினர். 9 பேர் காயமடைந்தனர்.

காத்மண்டு:

நேபாள நாட்டில் உள்ள கர்னாலி மாகாணத்தில் பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த பனிச்சரிவில் சிக்கி 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 9 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்த சம்பவம் முகு மாவட்டத்தின் சியார்கு கணவாயில் நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவலறிந்து சென்ற மீட்புக்குழுவினர் காயம் அடைந்த 9 பேரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

Tags:    

Similar News