உலகம்

போலீஸ் பாதுகாப்பு

பாரிஸ் நகரில் துப்பாக்கி சூடு- 3 பேர் உயிரிழப்பு

Published On 2022-12-23 21:29 IST   |   Update On 2022-12-23 21:29:00 IST
  • துப்பாக்கி சூடு நடத்தியதாக சந்தேகத்தின்பேரில் 69 வயது நிரம்பிய முதியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
  • இனவெறி காரணமாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடைபெறுகிறது.

பாரிஸ்:

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் குர்திஷ் கலாச்சார மையத்தை குறிவைத்து இன்று துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் 3 பேர் கொல்லப்பட்டனர். 3 பேர் காயமடைந்தனர். துப்பாக்கி சூடு நடத்தியதாக சந்தேகத்தின்பேரில் 69 வயது முதியவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கைது செய்யப்பட்டவர் ஏற்கனவே குற்ற வழக்கில் சிக்கி உள்ளார். கூடாரங்களில் வசிக்கும் புலம்பெயர்ந்தவர்களைத் தாக்கியதற்காக கைது செய்யப்பட்டிருக்கிறார். எனவே இனவெறி காரணமாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடைபெறுகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News