செய்திகள்
கொரோனா நோயாளி

பெருவில் வேகமெடுக்கும் கொரோனா - 6.63 லட்சத்தை தாண்டியது பாதிப்பு

Published On 2020-09-03 22:50 IST   |   Update On 2020-09-03 22:50:00 IST
பெரு நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 6.630 லட்சத்தைக் கடந்துள்ளது.
லிமா:

சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ், தற்போது உலகின் 210-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

தற்போதைய நிலவரப்படி கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பட்டியலில் பெரு 5-வது இடத்தில் உள்ளது.

இந்நிலையில், பெரு நாட்டில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.63 லட்சத்தைக் கடந்துள்ளது.

அங்கு கொரோனா தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 29 ஆயிரத்து 259 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 4.80 லட்சத்தை கடந்துள்ளது.

Similar News