செய்திகள்
சிகிச்சை குறித்து விளக்கும் மருத்துவர்

கொரோனாவின் கோரப்பிடியில் பிரேசில் - ஒரே நாளில் 30 ஆயிரத்தை நெருங்கும் பாதிப்பு

Published On 2020-05-30 00:20 GMT   |   Update On 2020-05-30 00:20 GMT
கொரோனா வைரசின் தாக்கம் பிரேசில் நாட்டில் தீவிரமடைந்துள்ளது. அங்கு ஒரே நாளில் 30 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு அடைந்துள்ளனர்.
ரியோ டி ஜெனிரோ:

கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அதைத்தொடர்ந்து, பிரேசில் இரண்டாம் இடத்தில் உள்ளது.

இந்நிலையில், கொரோனா வைரசின் தாக்கம் பிரேசில் நாட்டில் தீவிரமடைந்துள்ளது. அங்கு ஒரே நாளில் 30 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு அடைந்துள்ளனர். மேலும் ஒரே நாளில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்து 200-ஐ நெருங்கியுள்ளது.  

பிரேசில் நாட்டில் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை ஒரே நாளில் 30 ஆயிரத்தை நெருங்கியது. அங்கு கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 4 லட்சத்து 68 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.

மேலும், அங்கு கொரோனா வைரசுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 28 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 93 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
Tags:    

Similar News