செய்திகள்
சட்ட போராட்டத்தை தொடருவேன்- விஜய் மல்லையா
நாடு கடத்தும் உத்தரவுக்கு எதிரான சட்ட போராட்டத்தை தொடருவேன் என்று விஜய் மல்லையா தெரிவித்துள்ளார்.
லண்டன்:
கடன் மோசடி வழக்கில், நாடு கடத்தும் உத்தரவை எதிர்த்து விஜய் மல்லையா தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை லண்டன் கோர்ட்டு தள்ளுபடி செய்து விட்டது.
இந்நிலையில், இதுகுறித்து விஜய் மல்லையா வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
இந்த தீர்ப்பு எனக்கு ஏமாற்றம் அளிக்கிறது. இருப்பினும், எனது சட்டக்குழு அறிவுரைப்படி, நாடு கடத்தும் உத்தரவுக்கு எதிரான சட்ட போராட்டத்தை தொடருவேன்.
அதுபோல், நான் ரூ.9 ஆயிரம் கோடி கடன்பட்டுள்ளதாக ஊடகங்கள் கூறுவது தவறு. ரூ.900 கோடி கடனுக்குத்தான் வழக்கு நடக்கிறது. அந்த பணத்தை திருப்பித்தர தயாராக இருப்பதாக நான் கூறியதை வங்கிகள் ஏற்க மறுக்கின்றன.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
கடன் மோசடி வழக்கில், நாடு கடத்தும் உத்தரவை எதிர்த்து விஜய் மல்லையா தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை லண்டன் கோர்ட்டு தள்ளுபடி செய்து விட்டது.
இந்நிலையில், இதுகுறித்து விஜய் மல்லையா வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
இந்த தீர்ப்பு எனக்கு ஏமாற்றம் அளிக்கிறது. இருப்பினும், எனது சட்டக்குழு அறிவுரைப்படி, நாடு கடத்தும் உத்தரவுக்கு எதிரான சட்ட போராட்டத்தை தொடருவேன்.
அதுபோல், நான் ரூ.9 ஆயிரம் கோடி கடன்பட்டுள்ளதாக ஊடகங்கள் கூறுவது தவறு. ரூ.900 கோடி கடனுக்குத்தான் வழக்கு நடக்கிறது. அந்த பணத்தை திருப்பித்தர தயாராக இருப்பதாக நான் கூறியதை வங்கிகள் ஏற்க மறுக்கின்றன.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.