செய்திகள்
சீனா: குடியிருப்பில் தீ விபத்து - 6 பேர் உயிரிழப்பு
சீனா நாட்டின் தென்பகுதியில் உள்ள குவாங்டாங் மாகாணத்தில் இன்று குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர்.
பீஜிங்:
சீனா நாட்டின் தென்பகுதியில் குவாங்டாங் மாகாணத்துக்குட்பட்ட சோங்ஷான் நகரின்குசேன் டவுன்ஷிப் என்ற குடியிருப்பு பகுதி அமைந்துள்ளது.
இங்குள்ள ஜினான் சாலையில் ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் வசிக்கும் பலர் நேற்றிரவு நிம்மதியாக உறங்கச் சென்றனர். இன்று அதிகாலை அந்த கட்டிடத்தின் ஒரு வீட்டில் பற்றிய தீ மளமளவென அருகாமையில் உள்ள வீடுகளுக்கு பரவியது.
தகவலறிந்து விரைந்து வந்து தீயை அணைத்த மீட்புப் படையினர் உடல் கருகிய நிலையில் உயிரிழந்து கிடந்த 6 பிரேதங்களை கண்டெடுத்தனர். விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சீனா நாட்டின் தென்பகுதியில் குவாங்டாங் மாகாணத்துக்குட்பட்ட சோங்ஷான் நகரின்குசேன் டவுன்ஷிப் என்ற குடியிருப்பு பகுதி அமைந்துள்ளது.
இங்குள்ள ஜினான் சாலையில் ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் வசிக்கும் பலர் நேற்றிரவு நிம்மதியாக உறங்கச் சென்றனர். இன்று அதிகாலை அந்த கட்டிடத்தின் ஒரு வீட்டில் பற்றிய தீ மளமளவென அருகாமையில் உள்ள வீடுகளுக்கு பரவியது.
தகவலறிந்து விரைந்து வந்து தீயை அணைத்த மீட்புப் படையினர் உடல் கருகிய நிலையில் உயிரிழந்து கிடந்த 6 பிரேதங்களை கண்டெடுத்தனர். விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.