செய்திகள்
திபெத் புத்த மத தலைவர் தலாய் லாமா

அடுத்த தலாய்லாமாவை நாங்களே முடிவு செய்வோம் - சீனா அறிவிப்பு

Published On 2019-07-14 21:41 GMT   |   Update On 2019-07-14 21:41 GMT
அடுத்த தலாய் லாமா யார் என்பதை சீனாதான் முடிவு செய்யும், இதில் இந்தியா தலையிட்டால் அது இரு தரப்பு உறவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று சீனா சூசகமாக தெரிவித்துள்ளது.
பீஜிங்:

திபெத் புத்த மத தலைவராக தலாய் லாமா உள்ளார். 1959-ம் ஆண்டு இந்தியா வந்த இவர் இமாசல பிரதேச மாநிலம், தர்மசாலாவில் உள்ளார்.  இவருக்கு தற்போது வயது 84. கடந்த சில காலமாகவே அடுத்த தலாய் லாமா யார் என்ற கேள்வி எழுந்து வருகிறது.

இந்த நிலையில் அடுத்த தலாய் லாமா யார் என்பதை சீனாதான் முடிவு செய்யும், இதில் இந்தியா தலையிட்டால் அது இரு தரப்பு உறவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று சீனா சூசகமாக கூறுகிறது.

இதையொட்டி திபெத் துணை மந்திரி அந்தஸ்து வகிக்கிற சீன அதிகாரி வாங் நேங் ஷெங் கூறும்போது, “தலாய் லாமா நியமன விவகாரம், வரலாறு, மதம் மற்றும் அரசியல் ரீதியிலானது. அதற்கான வரலாற்று அமைப்புகள் உள்ளன. நடைமுறைகளும் உள்ளன. தலாய் லாமா யார் என்பதை எந்த தனிப்பட்ட நபரோ அல்லது வெளிநாடுகளில் உள்ள மக்களோ தீர்மானிக்க முடியாது” என கூறினார்.

இதே போன்று சீனா, திபெத் ஆராய்ச்சி அமைப்பின் இயக்குனர் ஜா லுவோ கூறுகையில், “அடுத்த தலாய் லாமா யார் என்பது சீனாவுக்கு முக்கியமான பிரச்சினை. இதில் எந்த நட்பு நாடோ, சீனாவின் நண்பர்களோ தலையிட கூடாது” என குறிப்பிட்டார்.
Tags:    

Similar News