செய்திகள்
ஆப்கானில் ராணுவ அகாடமியில் குண்டு வெடிப்பு- 6 பேர் உயிரிழப்பு
ஆப்கானிஸ்தானில் ராணுவ அகாடமியில் தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதில் 6 பேர் உயிரிழந்தனர்.
காபூல் நகரில் உள்ள ராணுவ அகாடமியில் உடலில் வெடிகுண்டுகளை கட்டிக்கொண்டு பயங்கரவாதி ஒருவன் தாக்குதலை நடத்த முயற்சி செய்துள்ளான். அப்போது அவனை பாதுகாப்பு படையினர் அடையாளம் கண்டு தடுக்க முயற்சி செய்த போது அவன் வெடிகுண்டை வெடிக்க செய்துள்ளான்.
இந்த சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்தனர் என பாதுகாப்பு படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தலிபான் பயங்கரவாதிகளுடன் அமைதிக்கான பேச்சுவார்த்தையை அமெரிக்கா மேற்கொண்டாலும் பாதுகாப்பு படையினரை குறிவைத்து மேற்கொள்ளப்படும் தாக்குதல் தொடர்கிறது.