செய்திகள்

246 கோகைன் பாக்கெட்டுகளை விழுங்கி கடத்தியவர் விமானத்தில் மரணம்

Published On 2019-05-28 10:41 GMT   |   Update On 2019-05-28 10:41 GMT
உயிரைப் பணயம் வைத்து 246 கோகைன் போதைப்பொருள் பாக்கெட்டுகளை குடலுக்குள் மறைத்து கடத்தி வந்தவர், விமானத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மெக்சிகோ:

கொலம்பிய தலைநகர் பொகோடாவில் இருந்து ஜப்பான் தலைநகர் டோக்கியோவுக்கு கடந்த வெள்ளிக்கிழமையன்று ஒரு பயணிகள் விமானம் புறப்பட்டு சென்றது. அதில் 199 பயணிகள் பயணம் செய்தனர்.

விமானம் மெக்சிகோ நாட்டின் சொனேரா மாகாணத்தின் மீது பறந்து கொண்டிருந்தது. அப்போது விமானத்தில் பயணம் செய்த ஜப்பானைச் சேர்ந்த 42 வயது பயணி ஒருவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டது.

உடனே விமானத்தை ஹெர்மோசில்லோ விமான நிலையத்தில் அவசரமாக தரை இறக்கினர். உடனே அங்கு தயாராக இருந்த டாக்டர்கள் அவரை பரிசோதித்தனர். அப்போது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.


அவரது உடலை பிரேத பரிசோதனை செய்தபோது, அவரது வயிறு மற்றும் குடல் பகுதியில் 246 கோகைன் போதைப் பொருள்  பாக்கெட்டுகள் இருந்தது தெரியவந்தது. ஜப்பானுக்கு கடத்துவதற்காக அளவுக்கு அதிகமாக கோகைன் பாக்கெட்டுகளை விழுங்கியிருக்கிறார். அவற்றில் சில பாக்கெட்டுகள் பிரிந்து, ரத்தத்தில் போதைப்பொருள் கலந்ததால் அவர் உயிரிழந்திருப்பதும் பரிசோதனையில் தெரியவந்தது.

மனிதர்களின் உடலுக்குள் போதைப் பொருளை மறைத்து கடத்தும் தந்திரத்தை, போதை மருந்து கடத்தல் கும்பல் பரவலாக கையாண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News