செய்திகள்

தென்னாப்பிரிக்காவில் சோகம் - சிறப்பு பிரார்த்தனையின்போது தேவாலய சுவர் விழுந்து 13 பேர் பலி

Published On 2019-04-19 14:38 GMT   |   Update On 2019-04-19 14:37 GMT
தென்னாப்பிரிக்கா நாட்டின் கடலோர மாகாணத்தில் சிறப்பு பிரார்த்தனையின்போது தேவாலயத்தின் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 13 பேர் உயரிழந்தனர். #13died #SouthAfricachurch #churchwall #churchwallcollapse
கேப் டவுன்:

தென்னாப்பிரிக்கா நாட்டின் கடலோர மாகாணங்களில் ஒன்றான குவாசுலு-நாட்டால் மாகாணத்தில் பழம்பெருமை மிக்க பெந்தகொஸ்தே தேவாலயம் ஒன்றுள்ளது. இந்த தேவாலயத்துக்கு தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ரமோபோசா கடந்த ஆண்டு வந்தபோது சிதிலமடைந்து வரும் இந்த தேவாலயத்தை புதுப்பித்து தருமாறு இப்பகுதி மக்கள் கேட்டுக் கொண்டனர்.

இந்த மாகாணத்தில் சில நாட்களாக டொடர்ந்து மழை பெய்துவரும் நிலையில் நேற்றிரவு இந்த தேவாலயத்தில் புனித வெள்ளிக்காக சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. அப்போது மழை நீரில் நனைந்திருந்த தேவாலயத்தின் சுவர் திடீரென்று இடிந்து விழுந்தது.

இந்த விபத்தில் 13 பேர் உயிரிழந்ததாகவும் பலர் காயமடைந்ததாகவும் உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. #13died #SouthAfricachurch #churchwall #churchwallcollapse
Tags:    

Similar News