செய்திகள்

ஈராக்கில் படகு கவிழ்ந்து 40 பேர் பலி

Published On 2019-03-21 20:13 GMT   |   Update On 2019-03-22 09:32 GMT
ஈராக்கில் படகு ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 40 பேர் தண்ணீரில் மூழ்கி இறந்தனர்.
பாக்தாத்:

ஈராக் நாட்டில் உள்ள குர்திஷ் இன மக்கள் தங்கள் புத்தாண்டை நேற்று வெகு விமரிசையாக கொண்டாடினர். இந்நிலையில் புத்தாண்டை கொண்டாட 40-க்கும் மேற்பட்டோர் ஒரு படகில் மொசூல் நகர் அருகே உள்ள டைகரிஸ் ஆற்றை கடந்து சென்றனர்.

அப்போது அளவுக்கு அதிகமாக பயணிகள் இருந்ததால் அந்த படகு திடீரென ஆற்றில் கவிழ்ந்தது. இதில் படகில் இருந்த 40 பேர் தண்ணீரில் மூழ்கி இறந்தனர். இதில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவர். ஆற்றில் மூழ்கி இறந்தவர்களின் உடல்களை மீட்கும் பணி நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News