செய்திகள்

ஆப்கானிஸ்தானில் 3,700 பயங்கரவாதிகள் கொன்று குவிப்பு

Published On 2019-03-19 13:10 GMT   |   Update On 2019-03-19 13:10 GMT
ஆப்கானிஸ்தான் நாட்டின் வடக்கு பகுதியில் மட்டும் ஓராண்டு காலத்தில் 3,771 பயங்கரவாதிகளை கொன்று குவித்தாக அந்நாட்டின் சிறப்பு படையினர் இன்று தெரிவித்தனர். #MilitantsKilled #NorthAfganistanMilitants
காபுல்:

ஆப்கானிஸ்தான் நாட்டு வடக்கு பகுதியில் தலிபான் பயங்கரவாதிகள் மற்றும் பல்வேறு சிறிய பயங்கரவாத குழுக்களின் ஆதிக்கம் சமீபகாலமாக மீண்டும் தலைதூக்க தொடங்கியுள்ளது.

பயங்கரவாதிகள் மீது ஈவிரக்கம் காட்டாமல் நடவடிக்கை எடுக்குமாறு அந்நாட்டின் ராணுவம் மற்றும் போலீசாருக்கு அதிபர் அஷ்ரப் கானி உத்தரவிட்டுள்ளார்.

அவ்வகையில், வடக்கு மற்றும் வடகிழக்கு ஆப்கானிஸ்தானுக்கு உட்பட்ட பல பகுதிகளில் கடந்த ஓராண்டு காலமாக நடைபெற்ற தேடுதல் வேட்டை மற்றும் மோதல்களில் 3,7,71 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக ராணுவத்தின் ‘209 ஷஹீன்’ படையை சேர்ந்த துணை தளபதி ஆதம் கான் மட்டின் இன்று தெரிவித்துள்ளார்.

‘வாலித் 97’ என்ற பெயரில் நடைபெற்ற இந்த பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் மொத்தம் 88 மோதல்களில் கொல்லப்பட்ட 3,771 பயங்கரவாதிகள் 64 பேர்  வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் ராணுவத்தின் தரப்பிலும் அதிகம் பேர் உயிரழந்ததாக உள்நாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. எனினும், தங்கள் உடலில் கடைசி சொட்டு ரத்தம் உள்ள வரையில் பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதலை நடத்துவோம் என்று பெரும்பான்மையான ராணுவ வீரர்கள் சபதமேற்றுள்ளதாக சில செய்திகள் தெரிவிக்கின்றன.

இதுதவிர, ஆப்கானிஸ்தானில் உள்ள பல்க் பகுதியில் ‘வாலித் 40’ என்ற பெயரிலும், குன்டுஸ் பகுதியில் ‘தூஃபான் 25’ என்ற பெயரிலும், பாக்லான் பகுதியில் ‘ஷஹின் 1’ என்ற பெயரிலும் தொடர்ந்து ராணுவத்தின் சிறப்பு படைகளின் பயங்கரவாத ஒழிப்பு வேட்டை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. #MilitantsKilled #NorthAfganistanMilitants
Tags:    

Similar News