செய்திகள்

மும்பை தாக்குதலில் தொடர்புடைய ஜமாத்-உத்-தவாவுக்கு தடை - பாகிஸ்தான் நடவடிக்கை

Published On 2019-02-21 23:35 GMT   |   Update On 2019-02-21 23:35 GMT
மும்பை தாக்குதலில் தொடர்புடைய ஜமாத்- உத்-தவாவுக்கும், அதன் அறக்கட்டளையான பலா-இ- இன்சானியாத் பவுண்டேசனுக்கும் பாகிஸ்தான் அரசு நேற்று தடை விதித்தது. #Pakistan #MumbaiAttack
இஸ்லாமாபாத்:

கடந்த 2008-ம் ஆண்டு, மும்பையில் நடந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டது, ஹபீஸ் சயீது தலைமையிலான ஜமாத்-உத்-தவா பயங்கரவாத இயக்கம் ஆகும். புலவாமா தாக்குதலைத் தொடர்ந்து, பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு பாகிஸ்தானுக்கு உலக நாடுகள் நிர்ப்பந்தம் அளித்து வருகின்றன. எனவே, ஜமாத்- உத்-தவாவுக்கும், அதன் அறக்கட்டளையான பலா-இ- இன்சானியாத் பவுண்டேசனுக்கும் பாகிஸ்தான் அரசு நேற்று தடை விதித்தது.

பிரதமர் இம்ரான் கான் தலைமையில் நடைபெற்ற தேசிய பாதுகாப்பு குழு கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டது. மேலும், தடை செய்யப்பட்ட இயக்கங்கள் மீது நடவடிக்கையை தீவிரப்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டது. #Pakistan #MumbaiAttack
Tags:    

Similar News