செய்திகள்

சீனாவில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 பேர் பலி

Published On 2019-01-30 11:46 GMT   |   Update On 2019-01-30 11:46 GMT
சீனாவின் ஜிலின் மாகாணத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கியாஸ் கசிந்த் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 8 பேர் பலியாகினர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #apartmentbuildinggasleak
பெய்ஜிங்:

சீனாவின் ஜிலின் மாகாணத்தில் உள்ள சாங்வான் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது. இன்று அதிகாலை இந்த குடியிருப்பின் நான்காவது மாடியில் சமையல் எரிவாயு கசிந்து திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் சிக்கி 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் என்றும், 3 பேர் படுகாயம் அடைந்தனர் என்றும் தீயணைப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தீ விபத்து குறித்து முதல் கட்ட விசாரணை நடந்து வருகிறது.
#apartmentbuildinggasleak
Tags:    

Similar News