செய்திகள்

வங்காளதேசத்தில் லாரி கவிழ்ந்த விபத்தில் 13 தொழிலாளிகள் பலி

Published On 2019-01-25 15:23 IST   |   Update On 2019-01-25 15:23:00 IST
வங்காளதேசம் நாட்டின் கம்மிலா மாவட்டத்தில் நிலக்கரி ஏற்றிச்சென்ற லாரி நிலைதடுமாறி கவிழ்ந்து செங்கல் சூளை தொழிலாளிகள் குடியிருப்பில் மோதிய விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர். #13killed #truckoverturns
டாக்கா:

வங்காளதேசம் நாட்டில் உள்ள கம்மிலா மாவட்டத்துக்குட்பட்ட நாராயண்பூர் கிராமத்தின் வழியாக நிலக்கரி ஏற்றிகொண்டு ஒரு லாரி வந்து கொண்டிருந்தது.

சாலையில் உள்ள ஒரு குறுகிய வளைவில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி பக்கவாட்டில் கவிழ்ந்தது. கவிழ்ந்தவாறு புரண்டுச் சென்று அருகாமையில் உள்ள ஒரு தற்காலிக குடியிருப்பில் மோதியது.

அந்த தற்காலிக குடியிருப்பில் சுமார் 15 செங்கல் சூளை தொழிலாளிகள் உறங்கிக் கொண்டிருந்தனர். லாரி மோதியதில் 13 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். #13killed  #truckoverturns 
Tags:    

Similar News