செய்திகள்
ஆப்கானிஸ்தானில் போலீஸ், தலிபான் பயங்கரவாதிகள் மோதலில் 11 பேர் பலி
ஆப்கானிஸ்தான் நாட்டின் இரு மாகாணங்களில் போலீசாருக்கும் தலிபான் பயங்கரவாதிகளுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் சம்பவங்களில் 11 பேர் உயிரிழந்தனர். #Afghanmilitants #Afghanclashes #AfghanTalibans
காபுல்:
ஆப்கானிஸ்தான் நாட்டில் சுமார் 45 சதவீதம் பகுதிகளில் ஆதிக்கம் செலுத்திவரும் தலிபான் பயங்கரவாதிகள் ஏராளமான பொதுமக்களை கொன்று குவித்து வருகின்றனர். அவர்களை வேட்டையாடும் நோக்கத்தில் ராணுவமும், விமானப் படையும் தாக்குதல் நடத்தி வருகிறது. குறிப்பாக, நாட்டின் வடபகுதிகளில் உள்ள மாகாணங்களில் பயங்கரவாதிகளின் அட்டூழியம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், அந்நாட்டின் பலாக் மாகாணத்துக்குட்பட்ட சிம்டால் மாவட்டத்தில் காவல் நிலையம் அருகேயுள்ள சோதனைச்சாவடி மீது நேற்றிரவு தலிபான் பயங்கரவாதிகள் துப்பாக்கிகளால் சுட்டும் வெடிகுண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 8 போலீசார் உயிரிழந்தனர்.
அருகாமையில் உள்ள தக்கார் மாகாணத்தில் உள்ள தஷ்த்-இ-காலா மாவட்டத்தில் ஒரு போலீஸ் அதிகாரி வீட்டில் தாக்குதல் நடத்தவந்த பயங்கரவாதிகளுக்கும் போலீசாருக்கும் இடையில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். #Afghanmilitants #Afghanclashes #AfghanTalibans
ஆப்கானிஸ்தான் நாட்டில் சுமார் 45 சதவீதம் பகுதிகளில் ஆதிக்கம் செலுத்திவரும் தலிபான் பயங்கரவாதிகள் ஏராளமான பொதுமக்களை கொன்று குவித்து வருகின்றனர். அவர்களை வேட்டையாடும் நோக்கத்தில் ராணுவமும், விமானப் படையும் தாக்குதல் நடத்தி வருகிறது. குறிப்பாக, நாட்டின் வடபகுதிகளில் உள்ள மாகாணங்களில் பயங்கரவாதிகளின் அட்டூழியம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், அந்நாட்டின் பலாக் மாகாணத்துக்குட்பட்ட சிம்டால் மாவட்டத்தில் காவல் நிலையம் அருகேயுள்ள சோதனைச்சாவடி மீது நேற்றிரவு தலிபான் பயங்கரவாதிகள் துப்பாக்கிகளால் சுட்டும் வெடிகுண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 8 போலீசார் உயிரிழந்தனர்.
அருகாமையில் உள்ள தக்கார் மாகாணத்தில் உள்ள தஷ்த்-இ-காலா மாவட்டத்தில் ஒரு போலீஸ் அதிகாரி வீட்டில் தாக்குதல் நடத்தவந்த பயங்கரவாதிகளுக்கும் போலீசாருக்கும் இடையில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். #Afghanmilitants #Afghanclashes #AfghanTalibans