செய்திகள்

ஆப்கானிஸ்தானில் ராணுவம் அதிரடி தாக்குதல் - 25 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்

Published On 2018-12-22 14:11 GMT   |   Update On 2018-12-22 14:11 GMT
ஆப்கானிஸ்தான் நாட்டின் மூன்று மாகாணங்களில் ராணுவம் நடத்திய தேடுதல் வேட்டையில் தலிபான் இயக்கத்தை சேர்ந்த 25 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். #Afghansf #Talibanmilitants
காபுல்:

ஆப்கானிஸ்தான் நாட்டில் சுமார் 45 சதவீதம் பகுதிகளில் ஆதிக்கம் செலுத்திவரும் தலிபான் பயங்கரவாதிகள் ஏராளமான பொதுமக்களை கொன்று குவித்து வருகின்றனர். அவர்களை வேட்டையாடும் நோக்கத்தில் ராணுவமும், விமானப் படையும் தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்நிலையில், கடந்த 24 மணி நேரமாக நன்கர்ஹர், ஃபர்யாப், மேற்கு ஃபரா ஆகிய மூன்று மாகாணங்களில் ராணுவ வீரர்கள் நடத்திய தேடுதல் வேட்டையில் 25 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 

மேற்கண்ட பகுதிகளில் இருந்து தலிபான்கள் வைத்திருந்த ராக்கெட் ஏவுகணைகள், இயந்திர துப்பாக்கிகள் மற்றும் ஏராளமான வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டதாக ஆப்கானிஸ்தான் ஊடகங்கள் இன்று செய்தி வெளியிட்டுள்ளன. #Afghansf #Talibanmilitants
Tags:    

Similar News