செய்திகள்

இந்தியாவிற்குள் நுழைந்த 6 சீனர்கள் நேபாள போலீசில் ஒப்படைப்பு

Published On 2018-11-09 08:07 GMT   |   Update On 2018-11-09 08:07 GMT
கவனக்குறைவாக இந்தியாவிற்குள் நுழைந்த 6 சீனர்களை இந்திய எல்லைப்படை அதிகாரிகள் பிடித்து நேபாள போலீசில் ஒப்படைத்தனர். #ChineseNationals #ChineseEnterIndia
பஹ்ரைச்:

நேபாளத்தில் சுற்றுலாப் பயணம் மேற்கொண்ட சீனர்கள் 6 பேர் நேற்று முன்தினம் நேபாள்கஞ்ச் பகுதியில் உள்ள பாகேஷ்வரி ஆலயத்திற்கு புறப்பட்டு சென்றனர். ஆனால், அவர்கள் கவனக்குறைவாக ருபாய்தீகா எல்லை வழியாக இந்தியாவிற்குள் நுழைந்துவிட்டனர்.



அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த எல்லைப் பாதுகாப்பு படையான எஸ்எஸ்ஏ வீரர்கள் தடுத்து நிறுத்தினர். விசாரணையில் அவர்கள் வழிதவறி வந்தது தெரியவந்தது. அவர்களிடம் நேபாள விசா இருந்தது. இதையடுத்து 2 பெண்கள் உள்ளிட்ட 6 பேரையும் எஸ்எஸ்பி வீரர்கள் பிடித்து, நேபாள காவல்துறையிடம் நேற்று ஒப்படைத்தனர். #ChineseNationals #ChineseEnterIndia
Tags:    

Similar News