செய்திகள்

ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் - தலிபான்கள் இடையே மோதல்: 21 பேர் பலி

Published On 2018-11-03 11:21 GMT   |   Update On 2018-11-03 11:21 GMT
ஆப்கானிஸ்தான் நாட்டின் கோக்யானி மாவட்டத்தில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் - தலிபான்கள் இடையே வெடித்த மோதலில் இருதரப்பிலும் 21 பேர் உயிரிழந்தனர். #21killed #ISISTalibanclash #Talibanmillitants
காபுல்:

ஆப்கானிஸ்தான் நாட்டின் நன்கர்ஹர் மாகாணத்துக்குட்பட்ட சில பகுதிகளில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. மற்ற பகுதிகளில் தலிபான்களின் ராஜ்ஜியம் கொடிகட்டி பறக்கிறது. இவர்கள் இருதரப்பினரும் அடிக்கடி ஒருவருக்கொருவர் மோதிக்கொள்வதுடன் பொதுமக்களின் உயிர்களை குறிவைத்து பயங்கரவாத தாக்குதல்களையும் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இங்குள்ள கோக்யானி மாவட்டத்துக்குட்பட்ட ஸாவா பகுதியில்  ஐ.எஸ். பயங்கரவாதிகள் - தலிபான்கள் இடையே இன்று வெடித்த மோதலில் தலிபான்கள் 18 பேரும், ஐ.எஸ்.பயங்கரவாதிகள் 3 பேரும் உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.  #21killed  #ISISTalibanclash #Talibanmillitants
Tags:    

Similar News