செய்திகள்

ராஜபக்சே பதவி ஏற்றபோது கீழே விழுந்த அதிகாரி

Published On 2018-10-31 09:58 GMT   |   Update On 2018-10-31 09:58 GMT
இலங்கையில் புதிய பிரதமராக மகிந்த ராஜபக்சே பதவி ஏற்றபோது பிரதமரின் செயலாளர் கீழே விழுந்து விட்டார். இது அபசகுனத்திற்கான அறிகுறி என சமூக வலைதளங்களில் செய்தி பரவுகிறது. #Rajapaksa
கொழும்பு:

இலங்கையில் புதிய பிரதமராக மகிந்த ராஜபக்சே நேற்று அதிகாரபூர்வமாக பொறுப்பேற்றார். அப்போது பிரதமரின் செயலாளர் சிறிசேன அமரசேகர கீழே விழுந்து விட்டார்.

இது அபசகுனத்திற்கான அறிகுறி என சமூக வலைதளங்களில் செய்தி பரவுகிறது. எனினும் ராஜபக்சே ஆதரவாளர்கள் இதை மறுத்துள்ளனர்.

செயலாளர் கீழே விழவில்லை. அவர் கீழே அமர்ந்திருந்த நிலையில் எழுந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. #Rajapaksa
Tags:    

Similar News