செய்திகள்

கலிதா ஜியாவின் தண்டனையை இரு மடங்காக உயர்த்தியது வங்காளதேச நீதிமன்றம்

Published On 2018-10-30 15:33 IST   |   Update On 2018-10-30 15:33:00 IST
ஆதரவற்றோர் அறக்கட்டளை முறைகேட்டில் மேல்முறையீடு வழக்கில் கலிதா ஜியாவுக்கு இன்று 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து வங்காளதேச கோர்ட்டு தீர்ப்பளித்தது. #KhaledaZia #KhaledaZiaGraftCase
டாக்கா:

வங்காள தேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவுக்கு ஊழல் வழக்கில் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு கோர்ட்டு நேற்று தீர்ப்பளித்தது.

இந்த நிலையில் ஆதரவற்றோர் அறக்கட்டளை முறைகேட்டில் மேல்முறையீடு வழக்கில் கலிதா ஜியாவுக்கு இன்று 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து வங்காளதேச கோர்ட்டு தீர்ப்பளித்தது.

ஆதரவற்றோர் அறக்கட்டளைக்காக வெளிநாடுகளில் இருந்து ரூ.1.6 கோடி முறைகேடாக பெற்றதாக கலிதா ஜியா, அவரது மகன் தாரிக் ரகுமான் உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக டாக்காவில் உள்ள கோர்ட்டில் வழக்கு நடைபெற்று வந்தது.

இந்த வழக்கில் கலிதா ஜியாவுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பிப்ரவரி மாதம் கோர்ட்டு தீர்ப்பளித்தது.

இதனை எதிர்த்து அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த வங்காள தேச ஐகோர்ட்டு, கீழ் கோர்ட்டு விதித்த 5 ஆண்டு சிறை தண்டனையை 10 ஆண்டுகளாக உயர்த்தி தீர்ப்பளித்தது. #KhaledaZia #KhaledaZiaGraftCase
Tags:    

Similar News