செய்திகள்
ஜப்பான் பிரதமருடன் மோடி சந்திப்பு - உலகின் மிகப்பெரிய ரோபோட் தொழிற்சாலையை பார்வையிட்டார்
இருநாள் அரசுமுறைப் பயணமாக இன்று டோக்கியோ வந்தடைந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜப்பானில் வசிக்கும் இந்தியர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். #ModiInJapan #Modi #ShinzoAbe #Yamanashi
டோக்கியோ:
இந்தியா - ஜப்பான் இடையிலான 13-வது உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இருநாள் அரசுமுறைப் பயணமாக நேற்று டோக்கியோ வந்தடைந்தடைந்தார்.
அவருக்கு டோக்கியோவில் உள்ள ஹனேடா விமான நிலையத்தில் ஜப்பான் அரசின் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜப்பான் மந்திரிகள், உயரதிகாரிகள் மற்றும் ஜப்பானுக்கான இந்திய தூதர் ஆகியோர் இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
பின்னர், அங்கிருந்து இம்பரீயல் ஹோட்டலுக்கு சென்ற மோடியை ஜப்பானில் வசிக்கும் இந்தியர்கள் அன்புடன் வரவேற்றனர். அவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்ற மோடி இன்று யாமானாஷி நகருக்கு வந்தார்.
ஜப்பானின் மிகப்பெரிய சிகரத்தை கொண்ட பியூஜி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள யாமானாஷி நகரில் உள்ள உலகின் மிகப்பெரிய ரோபோட் தயாரிப்பு தொழிற்சாலையை மோடி பார்வையிட்டார். பின்னர் இருவரும் இங்குள்ள பிரபல உணவகத்தில் மதிய உணவு அருந்தினர்.
இங்குள்ள தனது ஓய்வு இல்லத்தில் ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே பிரதமர் மோடிக்கு இன்று இரவு விருந்து அளிக்கிறார். பின்னர், இரு நாட்டின் பிரதமர்களும் இங்கிருந்து சுமார் 110 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள தலைநகர் டோக்கியோவுக்கு ரெயில் மூலம் வருகின்றனர்.
நாளை (திங்கட்கிழமை) டோக்கியோவில் நடைபெறும் பேச்சுவார்த்தையில் இருநாடுகளுக்கு இடையில் பாதுகாப்பு மற்றும் இந்தோ-பசிபிக் பகுதியில் நிலவும் அரசியல் பிரச்சனைகள் தொடர்பாக விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. #ModiInJapan #Modi #ShinzoAbe #Yamanashi
இந்தியா - ஜப்பான் இடையிலான 13-வது உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இருநாள் அரசுமுறைப் பயணமாக நேற்று டோக்கியோ வந்தடைந்தடைந்தார்.
அவருக்கு டோக்கியோவில் உள்ள ஹனேடா விமான நிலையத்தில் ஜப்பான் அரசின் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜப்பான் மந்திரிகள், உயரதிகாரிகள் மற்றும் ஜப்பானுக்கான இந்திய தூதர் ஆகியோர் இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
பின்னர், அங்கிருந்து இம்பரீயல் ஹோட்டலுக்கு சென்ற மோடியை ஜப்பானில் வசிக்கும் இந்தியர்கள் அன்புடன் வரவேற்றனர். அவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்ற மோடி இன்று யாமானாஷி நகருக்கு வந்தார்.
அங்கு ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே-வை சந்தித்த மோடி, இந்தியாவில் இருந்து கொண்டுசென்ற கலைநயம் மிக்க நினைவுப் பரிசுகளை அவருக்கு அளித்தார்.
ஜப்பானின் மிகப்பெரிய சிகரத்தை கொண்ட பியூஜி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள யாமானாஷி நகரில் உள்ள உலகின் மிகப்பெரிய ரோபோட் தயாரிப்பு தொழிற்சாலையை மோடி பார்வையிட்டார். பின்னர் இருவரும் இங்குள்ள பிரபல உணவகத்தில் மதிய உணவு அருந்தினர்.
இங்குள்ள தனது ஓய்வு இல்லத்தில் ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே பிரதமர் மோடிக்கு இன்று இரவு விருந்து அளிக்கிறார். பின்னர், இரு நாட்டின் பிரதமர்களும் இங்கிருந்து சுமார் 110 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள தலைநகர் டோக்கியோவுக்கு ரெயில் மூலம் வருகின்றனர்.
நாளை (திங்கட்கிழமை) டோக்கியோவில் நடைபெறும் பேச்சுவார்த்தையில் இருநாடுகளுக்கு இடையில் பாதுகாப்பு மற்றும் இந்தோ-பசிபிக் பகுதியில் நிலவும் அரசியல் பிரச்சனைகள் தொடர்பாக விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. #ModiInJapan #Modi #ShinzoAbe #Yamanashi