செய்திகள்

தஜிகிஸ்தானுடன் புதிய ஒப்பந்தங்கள் - ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் முன்னிலையில் கையொப்பமானது

Published On 2018-10-08 11:43 GMT   |   Update On 2018-10-08 11:43 GMT
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் முன்னிலையில் இந்தியா - தஜிகிஸ்தான் இடையே இன்று புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையொப்பமானது. #Tajikistan #RamNathKovind
துஷான்பே:

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மூன்று நாள் அரசுமுறை பயணமாக தஜிகிஸ்தான் நாட்டுக்கு சென்றுள்ளார். துஷான்பே நகர விமான நிலையத்தில் அந்நாட்டு துணை பிரதமர் தலைமையில் நேற்று சிகப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

தஜிகிஸ்தான் அதிபர் எமோமாலி ரஹ்மோன் - ராம்நாத் கோவிந்த் ஆகியோர் இன்று சந்தித்து இருநாடுகளுக்கு இடையிலான நட்புறவுகளை பலப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தினர்.


இந்த ஆலோசனைக்கு பின்னர் இந்தியா - தஜிகிஸ்தான் இடையே புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையொப்பமானது.

அரசியல் உறவு, ஆராய்ச்சி, வேளாண்மை, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, பாரம்பரிய மருத்துவம், விண்வெளி தொழில்நுட்பம், இளைஞர் நலத்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை ஆகிய துறைகளில் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இன்று கையொப்பமாகின. #RamNathKovind #Tajikistan #EmomaliRahmon #TajikistanIndiaMOU
Tags:    

Similar News