செய்திகள்

சோமாலியா - அமெரிக்க படையினர் நடத்திய வான்வெளி தாக்குதலில் 18 கிளர்ச்சியாளர்கள் பலி

Published On 2018-09-22 21:46 IST   |   Update On 2018-09-22 21:46:00 IST
அமெரிக்கா ராணுவத்தினர் நடத்திய வான்வெளி தாக்குதலில் சோமாலியாவில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் 18 கிளர்ச்சியாளர்கள் பலியாகினர்.
வாஷிங்டன்:

சோமாலியாவில் அல் ஷபாப் கிளர்ச்சியாளர்கள் அடிக்கடி தாக்குதல்களை மேற்கொண்டுவருகின்றனர். அல் ஷபாப் கிளர்ச்சியாளர்கள் செயற்பாடுகள் சோமாலியாவில் ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிற போதிலும் தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

கிளர்ச்சியாளர்களை கட்டுப்படுத்த சோமாலியா அரசு தீவிர நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. இந்த வேட்டையில் அமெரிக்க ராணுவமும் இணைந்துள்ளது.

இந்நிலையில், சோமாலியா நாட்டின் கிஸ்மயோ நகரின் லோயர் ஜுபா பகுதியில் பதுங்கி இருந்த கிளர்ச்சியாளர்கள் மீது அமெரிக்கா இன்று வான்வெளி தாக்குதல் நடத்தியது.

இந்த தாக்குதலில் சுமார் 18 கிளர்ச்சியாளர்கள் பலியாகினர். மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர் என அமெரிக்கா ராணுவம் தெரிவித்துள்ளது. #Tamilnews
Tags:    

Similar News