செய்திகள்

பாகிஸ்தானில் 18 இந்திய மீனவர்கள் கைது

Published On 2018-09-12 20:41 GMT   |   Update On 2018-09-12 20:41 GMT
பாகிஸ்தான் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்ததாக இந்தியாவை சேர்ந்த 18 மீனவர்களை அந்நாட்டு கடலோரக் காவல் படையினர் கைது செய்துள்ளனர். #IndianFishermenArrest
இஸ்லாமாபாத்: 
 
அரபுக் கடலில் பாகிஸ்தான் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த 18 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் கடலோரக் காவல் படையினர் கைது செய்துள்ளதாகவும், அவர்களுக்கு சொந்தமான 2 படகுகள் சிறைப்பிடிக்கப்பட்டது எனவும் அந்நாட்டின் கடலோரக் காவல் படையினர் தெரிவித்தனர். 

பாகிஸ்தான் கடலோரக் காவல் படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. #IndianFishermenArrest
Tags:    

Similar News