செய்திகள்

ஆப்கானிஸ்தானில் பயங்கர குண்டு வெடிப்பு - 5 போலீசார் பலி

Published On 2018-08-31 19:04 IST   |   Update On 2018-08-31 19:04:00 IST
ஆப்கானிஸ்தானில் சாலையோரம் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த வெடிகுண்டு வெடித்ததில் 5 போலீசார் பரிதாபமாக உயிரிழந்தனர். #Afganistan
காபுல்:

ஆப்கானிஸ்தானில் தலிபான், ஐ.எஸ் போன்ற பயங்கரவாத அமைப்புகளின் தாக்குதல்களினால் பொதுமக்கள், பாதுகாப்பு படையினர் என பலர் உயிரிழந்துவருகின்றனர். அவர்களை ஒடுக்க அரசும், அமெரிக்க கூட்டுப்படைகளுடன் இணைந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்நிலையில், ஆப்கானிஸ்தான் நங்கர்ஹார் மாகாணத்தில் சாலையில் வெடிகுண்டு ஒன்று பதுக்கி வைக்கப்பட்டு இருந்துள்ளது. அந்த வழியாக வந்த போலீஸ் வாகனம் அந்த வெடிகுண்டின் மீது ஏற, வெடிகுண்டு வெடித்து சிதறியது. இதில் 5 போலீசார் கொல்லப்பட்டனர். மேலும், 4 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த தாக்குதலுக்கு எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்காத நிலையில், ஐ.எஸ் பயங்கரவாதிகள் தான் இதுபோன்று வெடிகுண்டுகளை பதுக்கி வைத்து தாக்குதல் நடத்துவார்கள் என போலீஸ் அதிகாரி கைஸ் சைஃபி தெரிவித்துள்ளார்.

கடந்த புதன்கிழமை அன்று இதேபோல் மறைத்துவைக்கப்பட்ட வெடிகுண்டு தாக்குதலால் 3 பேர் உயிரிழந்த சம்பவம் குறிப்பிடத்தக்கது. #Afganistan
Tags:    

Similar News