செய்திகள்

வீட்டுவேலை செய்யுமாறு சித்திரவதை செய்த தந்தையை குத்திக்கொன்ற 3 சகோதரிகள்

Published On 2018-08-03 16:11 GMT   |   Update On 2018-08-03 16:11 GMT
படிக்கவிடாமல் வீட்டுவேலை செய்யுமாறு சித்திரவதை செய்த தந்தையை கத்தியால் கத்தியால் குத்திக் கொன்ற 3 சகோதரிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.
மாஸ்கோ:

ரஷியாவின் மாஸ்கோ நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் 57 வயது மிக்க நபர் கடந்த மாதாம் 27-ம் தேதி உடலில் 40 இடங்களில் கத்தியால் குத்தப்பட்ட தடங்களுடன் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இதனை அடுத்து, முறையே 17, 18 மற்றும் 19 வயதுடைய மூன்று மகள்களையும் போலீசார் தீவிர விசாரணைக்கு உள்படுத்தினர். 

விசாரணைக்கு பின்னர் பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளது. படிக்கவிடாமல் என்நேரமும் வீட்டு வேலை செய்ய கூறி அவர் தொடர்ந்து சித்திரவதை செய்து வந்ததாகவும், ஆயுதங்களால் தாக்கியதாகவும் 3 சகோதரிகள் கூறியுள்ளனர்.

இதனால், ஆத்திரமடைந்த அவர்கள் தந்தையை கத்தியால் குத்தி கொலை செய்ததாக போலீசாரிடம் தெரிவித்தனர். செப்டம்பர் 28 வரை மூன்று சகோதரிகளையும் ரிமாண்ட் செய்து கோர்ட் உத்தரவிட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், மூவருக்கும் குறைந்தது 10 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது. 
Tags:    

Similar News