செய்திகள்

பைப் உடைந்து வெளியேறும் தண்ணீர் அல்ல.. அடுக்குமாடி குடியிருப்பில் செயற்கை நீர்வீழ்ச்சி

Published On 2018-07-24 14:01 GMT   |   Update On 2018-07-24 14:01 GMT
சீனாவின் குய்ஷுவ் மாகானத்தில் உள்ள குயாங் நகரத்தில் வானுயர்ந்த கட்டிடம் ஒன்றில் அமைக்கப்பட்டுள்ள செயற்கை நீர்வீழ்ச்சியின் புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.
பீஜிங்:

சீனாவின் குய்ஷுவ் மாகானத்தில் உள்ள குயாங் நகரத்தில் சமீபத்தில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பில் அமைக்கப்பட்டுள்ள செயற்கை நீர்வீழ்ச்சி சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது. கட்டிடத்தில் இருந்து நீர் கீழே கொட்டும் அந்த காட்சி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

350 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த செயற்கை நீர்வீழ்ச்சி முழுவதும் மின்சார உதவியுடன் இயங்குகிறது. ஒரு மணி நேரம் இந்த நீர் வீழ்ச்சி இயங்க இந்திய மதிப்பில் ரூ.8000 செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், முக்கியமான நாட்களில் மட்டுமே இது இயக்கப்படும் என கட்டிடத்தின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News