செய்திகள்

வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினாவுடன் ராஜ்நாத் சிங் சந்திப்பு - இந்தியாவுக்கு வரும்படி அழைப்பு

Published On 2018-07-14 08:59 GMT   |   Update On 2018-07-14 08:59 GMT
வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினாவை இந்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். #SheikhHasina #RajnathSingh
டாக்கா :

வங்காளதேசத்தின் உள்துறை மந்திரி அசாதுஸமான் கான் விடுத்த அழைப்பை ஏற்று, இந்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் ஜூலை 13 முதல் 15 வரை வங்காளதேசத்தில் அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில், வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினாவை ராஜ்நாத் சிங் இன்று சந்தித்து பேசினார். ‘பிரதமர் ஷேக் ஹசினாவுடனான இன்றைய சந்திப்பு சிறப்பான முறையில் அமைந்தது. இருநாட்டுகளுக்கு இடையேயான உறவுகள் மற்றும் எல்லைப்பாதுகாப்பு குறித்த முக்கிய விவகாரங்கள் சந்திப்பின்போது விவாதிக்கப்பட்டது. பிரதமர் ஷேக் ஹசினாவை இந்தியாவிற்கு வருமாறும் தான் அழைப்பு விடுத்துள்ளேன்’ என சந்திப்பிற்கு பிறகு டுவிட்டரில் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.  
 
இதைத்தொடர்ந்து, ராஜ்நாத் சிங் மற்றும் ஷேக் ஹசினா ஆகிய இருவரும் வங்காளதேசத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள இந்திய விசா அலுவலகத்தின் திறப்பு விழாவில் பங்கேற்கின்றனர்.

மேலும், சுமார் 2 வருடங்களுக்கு பிறகு இருநாட்டு உள்துறை மந்திரிகள் இடையேயான சந்திப்பு நாளை நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. #SheikhHasina #RajnathSingh
Tags:    

Similar News