செய்திகள்

ஊழல் வழக்கில் தண்டனை - பாகிஸ்தான் தேர்தலில் இருந்து நவாஸ் ஷெரீப் மகள் விலகல்

Published On 2018-07-07 14:22 GMT   |   Update On 2018-07-07 14:22 GMT
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரின் மகள் மரியம் நவாஸ் போட்டியிட இருந்த 2 தொகுதிகளுக்கு வேறு வேட்பாளர்களை பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சி அறிவித்துள்ளது. #MaryamNawaz #PakistanGenaralElection
இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், அவரது மகள் மரியம் மற்றும் அவரது கணவர் ஆகியோர் அவன்பீல்டு ஊழல் வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். இதையடுத்து, அவர்களுக்கு சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டது.

இந்நிலையில், ஜூலை 25-ம் தேதி பாகிஸ்தானில் நடைபெற இருக்கும் பொதுத்தேர்தலில் நவாஸ் ஷெரீப்பின் மகள் மரியம் நவாஸ் போட்டியிட தடை விதிக்கப்பட்டது. லாகூரில் உள்ள என்.ஏ 127 மற்றும் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள பி.பி. 173 ஆகிய இரண்டு தொகுதிகளில் மரியம் நவாஸ் போட்டியிட இருந்தார்.

தற்போது அவர் தேர்தலில் போட்டியிட தடை செய்யப்பட்டதால், அவருக்கு பதிலாக அந்த இரு தொகுதிகளில் போட்டியிடுவதற்காக வேறு 2 வேட்பாளர்களை பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சி அறிவித்துள்ளது.

லாகூரில் உள்ள என்.ஏ 127 தொகுதியில் அலி பர்வேஷ் மாலிக்கும், பஞ்சாப் மாகாணத்தின் என்.ஏ 173 தொகுதியில் இர்பான் ஷாஃபி கோக்தர் ஆகியோர் போட்டியிட இருப்பதாக அந்த கட்சி அறிவித்துள்ளது. #MaryamNawaz #PakistanGenaralElection
Tags:    

Similar News