செய்திகள்

ஆப்கானிஸ்தான் - கார் குண்டு வெடிப்பு தாக்குதலில் 5 பேர் பலி

Published On 2018-07-02 23:30 GMT   |   Update On 2018-07-02 23:30 GMT
ஆப்கானிஸ்தான் நாட்டில் நடத்தப்பட்ட கார் வெடிகுண்டு தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் உள்பட 5 பேர் உடல் சிதறி பலியாகினர்.
காபுல்:

ஆப்கானிஸ்தான் நாட்டின் லாகர் மாகாணத்தில் நேற்று கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் உள்பட 5 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர் என போலீசார் தெரிவித்தபர்.

விசாரணையில், நாட்டோ படைகள் சென்ற வாகனத்தை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல் இது என அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆப்கானிஸ்தானில் நன்கர்ஹர் மாகாணத்தின் தலைநகரான ஜலாலாபாத் என்னும் இடத்தில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் சீக்கியர்கள் உள்பட 19 பேர் பரிதாபமாக பலியானது குற்ப்பிடத்தக்கது.
Tags:    

Similar News