செய்திகள்

எத்தியோப்பியா பிரதமர் பாதுகாப்பில் குறைபாடு - அடிடாஸ் அபாபா போலீஸ் துணை கமிஷனர் கைது

Published On 2018-06-24 09:11 GMT   |   Update On 2018-06-24 09:11 GMT
எத்தியோப்பியா பிரதமர் பேசிய பொதுகூட்டத்தின்போது ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாட்டால் அவரது உயிருக்கு ஆபத்து விளைவித்ததாக அடிடாஸ் அபாபா நகர போலீஸ் துணை கமிஷனர் கைதானார். #EthiopiaPM
அடிடாஸ் அபாபா:

எத்தியோப்பியா நாட்டின் பிரதமராக அபிய் அஹமத் கடந்த ஏப்ரல் மாதம் பதவியேற்றார். இவரது ஆட்சிக்கு ஆதரவு தெரிவித்து தலைநகர் அடிஸ் அபாபாவில் நேற்று பல்லாயிரக்கணக்கான ஆதரவாளர்கள் மாபெரும் பேரணி ஒன்றை நடத்தினர்.

பேரணி முடிவில் மக்களிடையே உரையாற்றிய பிரதமர் அபிய் அஹமத், விடைபெற்று செல்ல ஆதரவாளர்களை நோக்கி கையை அசைத்தார். மக்களும் மகிழ்ச்சி ஆரவாரத்துடன் அவரை வழியனுப்புவதற்காக கைகளை அசைத்து விடையளித்தனர்.

அப்போது, மக்கள் கூட்டத்துக்கிடையில் பயங்கர சப்தத்துடன் கையெறி குண்டு வெடித்தது. இதனால் பதற்றமடைந்த மக்கள் உயிர் பயத்தில் நாலாபுறமும் சிதறி ஓடினர். இந்த சம்பவத்தில் பிரதமர் காயங்களின்றி உயிர் தப்பினார். கூட்டத்தில் இருந்த ஒருவர் உயிரிழந்தார். காயமடைந்த பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.


இந்நிலையில், பிரதமரின் பாதுகாப்பில் குறைபாடு ஏற்பட்டதால் அடிடாஸ் அபாபா போலீஸ் துணை கமிஷனர் மற்றும் 8 பேரை உயரதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனர். #EthiopiaPM
Tags:    

Similar News