செய்திகள்

8 நாள் சிகிச்சைக்கு பின்னர் பாலஸ்தீன அதிபர் வீடு திரும்பினார்

Published On 2018-05-28 11:38 GMT   |   Update On 2018-05-28 11:38 GMT
நுரையீரல் பாதிப்புக்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாலஸ்தீன அதிபர் மஹமுத் அப்பாஸ் இன்று வீடு திரும்பினார். #MahmoudAbbas
ரமல்லா:

இஸ்ரேலின் பரம பகை நாடாக விளங்கும் பாலஸ்தீன நாட்டின் அதிபராக பொறுப்பு வகிப்பவர் மஹமுத் அப்பாஸ்(82). சமீப காலமாக நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த இவர் ரமல்லா நகரில் உள்ள மருத்துவமனையில் கடந்த ஒருவார காலமாக சிகிச்சை பெற்று வந்தார்.

 
இந்நிலையில், உடல் நலம் குணமடைந்த நிலையில் இன்று அவரை மருத்துவர்கள் டிஸ்சார்ஜ் செய்தனர். மருத்துவமனை வளாகத்தில் பத்திரிகையாளர்களிடம் பேசிய அப்பாஸ், 'நல்ல ஆரோக்கியத்துடன் மருத்துவமனையை விட்டு செல்வதற்கு கடவுளுக்கு நன்றி. நல்லபடியாக நாளை பணிக்கு திரும்புவேன்' என கூறினார். #MahmoudAbbas


Tags:    

Similar News