செய்திகள்

ஈராக் பாராளுமன்ற தேர்தலில் மதகுரு கூட்டணி ஆட்சியை கைப்பற்றியது

Published On 2018-05-19 18:40 IST   |   Update On 2018-05-19 18:40:00 IST
ஈராக்கில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் மதகுரு மக்தாதா சதார் தலைமையிலான கூட்டணி கட்சி ஆட்சியை கைப்பற்றியது. #IraqElection #MuqtadaAlsadr
பாக்தாத்:

ஈராக்கில் சதாம் உசேன் வீழ்ச்சிக்கு பிறகு அங்கு ஜனநாயக ஆட்சி மலர்ந்தது. இந்த நிலையில் திடீரென ஐ.எஸ். தீவிரவாதிகள் எழுச்சி பெற்று பெரும் பகுதியை கைப்பற்றி தனிநாடு அமைத்தனர்.

தினமும் வன்முறை வெறியாட்டங்கள் நடத்தி பொதுமக்களை கொன்று குவித்தனர். எனவே அமெரிக்க கூட்டுப் படையின் உதவியுடன் கடந்த டிசம்பரில் அவர்கள் முற்றிலும் அழிக்கப்பட்டனர்.

அதைதொடர்ந்து ஈராக்கில் கடந்த 12-ம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடத்தப்பட்டது. அதில் மும்முனை போட்டி நிலவியது. பிரதமர் ஹைதர் அல்-அபாடி தலைமையிலான நசார் கூட்டணி போட்டியிட்டது. அவரை எதிர்த்து ஷியா பிரிவு மதகுரு மக்தாதா சதாரின் கூட்டணியும், பதே கட்சி கூட்டணியும் மோதின.



இந்த தேர்தலில் 44.5 சதவீதம் வாக்குகள் பதிவாகின. ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியானது. அதில் மதகுரு மக்தாதா தலைமையிலான கூட்டணி 54 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. இவருக்கு அடுத்தபடியாக பதே கட்சி 2-வதாக 47 இடங்கள் வந்துள்ளது.

இத்தேர்தலில் பிரதமர் அபாடி தலைமையிலான நசார் கூட்டணி படுதோல்வி அடைந்தது. இக்கட்சி 42 இடங்கள் பிடித்து 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டது.

தேர்தலில் வெற்றி பெற்றாலும் மதகுரு மக்தாதா சதார் பிரதமராக முடியாது. ஏனெனில் அவர் தேர்தலில் போட்டியிடவில்லை. இவர் ஷியா பிரிவு தீவிரவாத இயக்கத்தின் தலைவராக இருந்தார். இதனால் இவர் அமெரிக்காவின் நீண்டகால எதிரி ஆவார்.

மக்தாதா பிரதமராக முடியாவிட்டாலும் புதிய அரசு அமைவதில் முக்கிய பங்கு வகிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
#IraqElection #MuqtadaAlsadr
Tags:    

Similar News