செய்திகள்

முதன் முறையாக ஐ.நா. பொதுச்சபை கூட்டத்துக்கு தாமதமாக வந்த ஒபாமா

Published On 2016-09-21 07:05 GMT   |   Update On 2016-09-21 07:05 GMT
நியூயார்க்கில் நேற்று நடைபெற்ற ஐ.நா.பொது சபை கூட்டத்திற்கு அமெரிக்க அதிபர் பாரக் தாமதமாக வந்தார்
நியூயார்க்:

ஐ.நா. சபை ஆண்டு பொது சபை கூட்டம் நேற்று நியூயார்க்கில் தொடங்கியது. தொடக்க நாளன்று பிரேசிலுக்கு அடுத்தடியாக அமெரிக்க அதிபர் 2-வதாக பேச வேண்டும்.

ஆனால் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா நேற்று கூட்டம் தொடங்கிய பிறகு தாமதமாக வந்தார். அதனால் அவர் பிரேசிலுக்கு அடுத்தபடியாக பேச முடியவில்லை.

ஒபாமா வராததால் சாட் நாட்டு பிரதிநிதியை 2-வதாக பேசும்படி ஐ.நா.சபை தலைவர் அழைத்தார். அதன் மூலம் இவர் ஐ.நா. சபை வரலாற்றில், 2-வதாக பேசும் மரபை இழந்த அமெரிக்க அதிபர் ஆனார்.

Similar News