உலகம்

சீனாவில் பயங்கர தீ விபத்து: 19 பேர் உடல் கருகி பலி

Published On 2023-11-16 06:15 GMT   |   Update On 2023-11-16 06:15 GMT
  • ஐந்து மாடி கட்டடத்தின், 2-வது மாடியில் தீ விபத்து ஏற்பட்டது.
  • தீயணைப்புப் படையினர் தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சீனாவின் லியுலியாங் நகரில் உள்ள மாவட்டம் லிஷி. இந்த மாவட்டத்தில் ஐந்து மாடி கட்டடம் ஒன்று உள்ளது. இந்த கட்டடம் சீனாவின் பிரபலமான யோங்ஜு நிலக்கரி சுரங்கம் நிறுவனத்திற்கு சொந்தமானது. இந்த கட்டடத்தின் 2-வது மாடியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் 19 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புப் படையினர் தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அதிகாரிகள் தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Tags:    

Similar News