உலகம்

காசாவில் இஸ்ரேல் தாக்குதலில் ஒரே நாளில் 123 பேர் பலி.. பட்டினியால் உயிரிழந்தவர் எண்ணிக்கை 235 ஆக உயர்வு

Published On 2025-08-14 02:45 IST   |   Update On 2025-08-14 02:46:00 IST
  • உணவுக்காகக் காத்திருந்தபோது 21 பேர் கொல்லப்பட்டனர்.
  • பட்டினியால் உயிரிழந்தவர்களில் 106 குழந்தைகள் அடங்குவர்.

பாலஸ்தீன நாட்டின் முக்கிய நகரமான காசாவில் இஸ்ரேல் ராணுவம் நேற்று (புதன்கிழமை) ஒரே நாளில் 123 பேரை கொன்று குவித்துள்ளது.

ஜைடவுன் பகுதியில் நடந்த கடுமையான குண்டுவீச்சில் 12 பேர் கொல்லப்பட்டனர். சப்ரா மற்றும் ஷேக் ரத்வானிலும் தாக்குதல்கள் நடந்தன. அங்கு உணவுக்காகக் காத்திருந்தபோது 21 பேர் கொல்லப்பட்டனர்.

இதற்கிடையே நேற்று காசாவில் மூன்று குழந்தைகள் உட்பட மேலும் எட்டு பேர் பட்டினியால் உயிரிழந்துள்ளனர்.

இதன் மூலம் காசாவில் பட்டினியால் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 235 ஆக உயர்ந்துள்ளது. இதில் 106 குழந்தைகள் அடங்குவர்.

இரண்டு ஆண்டுகளாக நடந்து வரும் இந்த போரில், இதுவரை 61,722 பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலால் கொல்லப்பட்டுள்ளனர். இதில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவர்.

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே நிரந்தர போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகளை விடுவிப்பது குறித்து எகிப்து, கத்தார், மற்றும் அமெரிக்கா தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

இதற்கிடையே, இஸ்ரேல் காசா நகரை முழுமையாகக் கைப்பற்ற திட்டமிட்டுள்ளது. 

Tags:    

Similar News