செய்திகள்

பயனருக்கு தெரியாமல் புதிய பஞ்சாயத்து - ஃபேஸ்புக் மீது மற்றொரு வழக்கு

Published On 2018-04-17 14:24 IST   |   Update On 2018-04-17 14:24:00 IST
முக அங்கீகார தொழில்நுட்ப பயன்பாடு விவகாரம் தொடர்பாக ஃபேஸ்புக் மீது புதிய வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சான் ஃபிரான்சிஸ்கோ:

ஃபேஸ்புக்கில் முக அங்கீகார தொழில்நுட்ப பயன்படுத்திய விவகாரத்தில் கலிபோர்னியா மாகாண நீதிபதி உத்தரவின் பேரில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

பயனர்களுக்கு தெரியாமல் அவர்களின் பயோமெட்ரிக் தகவல்களை சேகரித்ததாக ஃபேஸ்புக் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. ஃபேஸ்புக் பயன்படுத்தும் போது நாம் எதிர்கொண்டு வரும் டேக் சஜஷன்ஸ் (tag suggestions) தொழில்நுட்பம் இல்லினியோஸ் சட்ட விதிகளை மீறும் வகையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஃபேஸ்புக்கில் உள்ள டேக் சஜெஷனஸ் தொழில்நுட்பம், தளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் புகைப்படங்களில் உள்ள நண்பர்களை கண்டறிந்து அவர்களை டேக் செய்ய பரிந்துரை செய்யும். புதிய குற்றச்சாட்டு தொடர்பாக வழக்கை சட்ட ரீதியாக எதிர்கொள்ள தயார் என ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது.

ஃபேஸ்புக் மீது தொடரப்பட்டிருக்கும் வழக்கில் ஒரு சில ஃபேஸ்புக் பயனர்களும் பாதிக்கப்பட்டவர்கள் பிரிவில் இடம்பெற்றிருக்கலாம் என்பதால் அவர்களும் இந்த வழக்கில் தொடர்புடையவர்களாக கருதப்படுவர் என நீதிபதி ஜேம்ஸ் டொனாட்டோ தெரிவித்திருக்கிறார். 


கோப்பு படம்

அந்த வகையில் ஜூன் 7, 2011 முதல் புகைப்படங்களில் இருந்து ஃபேஸ் டெம்ப்ளேட் உருவாக்கி சேமித்து வைத்திருக்கும் அனைத்து ஃபேஸ்புக் பயனர்களும் இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் எனலாம். ஃபேஸ்புக் பயனருக்கு சாதகமாக வழக்கு வெற்றிபெறும் பட்சத்தில் வழக்கில் தொடர்புடையோர் தகுந்த நஷ்ட ஈடு பெற முடியும். 

இவ்வாறு நடக்கும் பட்சத்தில் பல பில்லியன் டாலர்களை ஃபேஸ்புக் நஷ்ட ஈடாக வழங்க வேண்டிய சூழல் ஏற்படும் என நீதிபதி டொனாட்டோ தெரிவித்திருக்கிறார். முன்னதாக அமெரிக்க பாராளுமன்ற குழுவின் முன் ஆஜரான ஃபேஸ்புக் நிறுவனர் அவர்களின் நுனுக்கமான கேள்விகளுக்கு பதில் அளித்திருந்தார். 

ஃபேஸ்புக்கில் டேக் சஜெஷன்ஸ் அம்சம் ஜூன் 2011-இல் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த அம்சம் அப்லோடு செய்யப்படும் புகைப்படங்களில் இடம்பெற்றிருப்போரை ஃபேஸ்புக் சேகரித்து வைத்திருக்கும் டேட்டாபேஸ்-இல் ஒப்பிட்டு டேக் செய்ய சரியாக பரிந்துரை வழங்கும். 


கோப்பு படம்

நீதிபதி டொனாட்டோ தனது பரிந்துரையின் கீழ் இந்த தொழில்நுட்பம் நான்கு கட்ட வழிமுறைகளை கொண்டுள்ளது என தெரிவித்திருக்கிறார். 

அதன் படி முதற்கட்டமாக இந்த மென்பொருள் புகைப்படங்களில் உள்ள முகங்களை கண்டறியும், அடுத்து அவற்றை ஒழுங்குப்படுத்தி, சரியான திசையில் மாற்றியமைக்கும், மூன்றாவதாக ஒவ்வொரு முகத்திற்கும் கணித முறையிலான வடிவத்தை வழங்கும், இறுதியில் ஃபேஸ்புக் சேகரித்து பதிவு செய்திருக்கும் டேட்டாபேஸ்-இல் இருந்து சரியான நபரை ஃபேஸ் டெம்ப்ளேட் மூலம் கண்டறியும் என தெரிவித்துள்ளார். 

ஃபேஸ்புக் உதவி பக்கத்தில் ஃபேஸ் டெம்ப்ளேட்கள் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு டேக் செய்யப்படும் புகைப்படங்களின் ஒற்றுமையை வைத்து உருவாக்கப்படும். ஒருவர் ஃபேஸ்புக்கில் டேக் செய்யப்படாமல் இருந்தாலோ அல்லது ஃபேஸ்புக்கில் அனைத்து புகைப்படங்களையும் அன்-டேக் செய்திருந்தாலோ ஃபேஸ்புக் உங்களின் தகவல்களை சேகரிக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News