செய்திகள்
ஏர்டெல் வழங்கும் 5ஜிபி இலவச டேட்டா: ஏர்டெல் அறிவிப்பு
ஏர்டெல் பிராட்பேண்ட் சேவையை பயன்படுத்தும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் மாதம் 5 ஜிபி அளவு டேட்டாவை இலவசமாக வழங்குவதாக ஏர்டெல் அறிவித்துள்ளது.
புதுடெல்லி:
ஏர்டெல் மைஹோம் ரிவார்ட்ஸ் திட்டத்தின் கீழ் ஏர்டெல் போஸ்ட்பெயிட் அல்லது டி.டி.எச். இணைப்புகளை பயன்படுத்தும் பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் டேட்டா ஏற்கனவே வழங்கப்பட்டு வருகிறது.
முதற்கட்டமாக ஒரு இணைப்பிற்கு 5 ஜிபி கூடுதல் டேட்டா வழங்கப்பட்டு அதன்பின் 10 ஜிபியாக அதிகரிக்கப்பட்டது. இந்நிலையில், வீட்டில் ஏர்டெல் போஸ்ட்பெயிட் இணைப்பை பயன்படுத்தி வரும் பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களுக்கு ஒவ்வொரு மாதமும் இலவசமாக 5 ஜிபி மொபைல் டேட்டா வழங்குவதாக அறிவித்துள்ளது.
ஏர்டெல் வழங்கும் இலவச கூடுதல் டேட்டாவினை போஸ்ட்பெயிட் மற்றும் பிராட்பேண்ட் இணைப்பை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் மைஏர்டெல் செயலி மூலம் பெற முடியும். மேலும் ஏர்டெல் வழங்கும் கூடுதல் டேட்டா ஒவ்வொரு வட்டாரத்திலும் தேர்வு செய்யப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு மட்டும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிராட்பேண்ட் டேட்டா ரோல்ஓவர் வழங்கும் அனைத்து திட்டங்களிலும் கூடுதல் டேட்டா வழங்கப்படுகிறது. எனினும் ஏர்டெல் வழங்கும் கூடுதல் டேட்டா போஸ்ட்பெயிட் ரோல்ஓவர் திட்டத்தில் சேர்க்கப்படாது.
இந்த சலுகையை பெறுவது எப்படி?
- ஆண்ட்ராய்டு அல்லது ஐ.ஓ.எஸ். இயங்குதளங்களில் மைஏர்டெல் செயலியை இன்ஸ்டால் செய்ய வேண்டும்.
- போஸ்ட்பெயிட் நம்பரை பதிவு செய்து, ஒரு முறை பயன்படுத்தும் கடவுச்சொல் மூலம் உறுதி செய்ய வேண்டும்.
- செயலியின் முகப்பு பக்கத்தில் இலவசமாக வழங்கப்படும் 5 ஜிபி டேட்டா விளம்பரத்தில் கிளிக் செய்து, அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றி இலவச மாத டேட்டாவினை பெற முடியும்.
- இந்த சலுகையை பெறாதவர்கள், முதலில் கிரியேட் மைஹோம் (create myHome) ஆப்ஷனை கிளிக் செய்து உங்களது பிராட்பேண்ட் மற்றும் போஸ்ட்பெயிட் இணைப்பை புதிய சேவைகளுக்கு சிறப்பு சலுகைகள் (Great Offers on New Products) இணைக்க வேண்டும்.