தமிழ்நாடு செய்திகள்

ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 3 ஆயிரம் கனஅடியாக நீடிக்கிறது

Published On 2025-04-23 14:59 IST   |   Update On 2025-04-23 14:59:00 IST
  • ஒகேனக்கலில் நேற்று 3 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று, தொடர்ந்து அதே அளவில் நீடிக்கிறது.
  • காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் சமீபத்தில் பெய்த மழை காரணமாக ஒகேனக்கலில் இதமான சூழல் நிலவியது.

ஒகேனக்கல்:

தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கலுக்கு நீர்வரத்து வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

இந்த நிலையில் தமிழக கர்நாடகா எல்லைப் பகுதியான பிலிகுண்டுலுவில் நீர்வரத்து குறைவதும், அதிகரிப்பதுமாக உள்ளது. இதன் காரணமாக ஒகேனக்கலில் நேற்று 3 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று, தொடர்ந்து அதே அளவில் நீடிக்கிறது.

இதன் காரணமாக ஒகேனக்கல் அருவிகளான ஐந்தருவி, சினிபால்ஸ், மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் கொட்டும் தண்ணீரின் வேகமும் சற்று அதிகரித்துள்ளது.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் சமீபத்தில் பெய்த மழை காரணமாக ஒகேனக்கலில் இதமான சூழல் நிலவியது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News