தமிழ்நாடு செய்திகள்

7 இடங்களில் நீர் சுழற்சி... மெரினா கடலில் குளிக்க வேண்டாம் - போலீசார் வேண்டுகோள்

Published On 2025-05-21 07:56 IST   |   Update On 2025-05-21 07:56:00 IST
  • மெரினா கடலில் குளிப்பதை தடுக்க போலீசார் எவ்வளவோ நடவடிக்கை எடுத்தும் பலன் இல்லை.
  • கடலில் குளிப்பதை தடுக்கும் விதமாக பாதுகாப்பு அரண்களை அமைத்து போலீசார் விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை:

சென்னை மெரினா கடலில் குளிக்கும் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் அடிக்கடி உயிரை இழக்கும் சம்பவங்கள் நடக்கிறது. மெரினா கடலில் குளிப்பதை தடுக்க போலீசார் எவ்வளவோ நடவடிக்கை எடுத்தும் பலன் இல்லை.

இந்தநிலையில் இணை கமிஷனர் விஜய குமார் தற்போது புதிய முயற்சியில் இறங்கி உள்ளார்.

நேப்பியர் பாலம் முதல் பட்டினம்பாக்கம் வரை உள்ள மெரினா கடல் பகுதியில் 7 இடங்களில் கடல் நீருக்குள் சுழற்சி இருப்பதாகவும் அந்த பகுதியில் கடலில் குளிப்பவர்கள் சுழற்சியில் சிக்கி அலையால் இழுத்து செல்லப்பட்டு உயிரை விடுகிறார்கள். எனவே அந்த பகுதியில் கடலில் குளிப்பதை தடுக்கும் விதமாக பாதுகாப்பு அரண்களை அமைத்து போலீசார் விழிப்புணர்வு பிரசாரத்திலும் ஈடுப்பட்டுள்ளனர். இந்த புதிய முயற்சிக்கு பலன் கிடைக்கும் என் நம்புவதாக போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

Similar News